பாலஸ்தீன குடிமக்கள் அனைவரையும் காசா நகரை விட்டு வெளியேற இஸ்ரேல் உத்தரவு
டெல் அவில்: இஸ்ரேலிய ராணுவம் அனைத்து பாலஸ்தீன குடிமக்களையும் காசா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 208 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கான் யூனிஸில் இடம்பெயர்ந்த குடிமக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், புதன்கிழமை இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அக்டோபர் 7-ஆம் தேதி முதல் ஹமாஸ் போராளிகளில் 60 சதவீதத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.