பரங்கிமலை, பல்லாவரத்தில் மீட்கப்பட்ட அரசு நிலத்தில் கல்லூரி, சமூக நலக்கூடம், வணிக வளாகம் அமைக்க திட்டம்

பல்லாவரம்: பரங்கிமலை, பல்லாவரத்தில் மீட்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் அரசு நிலத்தில், கல்லூரி, சமூக நலக்கூடம், வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம் வட்டத்துக்குட்பட்ட புனித தோமையர் மலை கிராமம், கண்டோன்மென்ட் பல்லாவரம் கிராமம் ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் சுமார் 15 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அண்மையில் வருவாய்த் துறையினரால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 ஆயிரம் கோடியாகும். இந்நிலையில் மீட்கப்பட்ட இடத்தில் அரசு அலுவலகங்கள் கட்டவும் மக்கள் நலத்திட்டங் களுக்கு பயன்படுத்தவும் வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.