வெப்ப அலை குறைந்ததால் ஆவின் தினசரி கொள்முதல் 33 லட்சம் லிட்டராக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பத்தால் குறைந்திருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 33.04 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்பம் கொளுத்தியது. இதனால் கால்நடைகளுக்கு வெப்ப அழுத்தம் ஏற்பட்டதில், உள்நாட்டு, வெளிநாட்டு கலப்பின கறவை மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் சராசரி கொள்முதல் பால் அளவும் குறைந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.