‘போர் பகுதிகளில் இருந்து விலகி இருங்கள்’ - உக்ரைன் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுரை

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் போர் நடக்கும் இடங்களில் இருந்து விலகியே இருக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் இந்தியர்களை முன்கூட்டியே விடுவித்து அனுப்புவது குறித்து ரஷ்யாவுடன் இந்தியா பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணி புரிவதற்காக இந்தியர்கள் சிலர் ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்களை முன்கூட்டியே பணியில் இருந்து விடுவித்து அனுப்புவது தொடர்பாக இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும், போர் பகுதிகளில் இருந்து விலகியே இருக்கும்படி அறிவுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.