காசா போருக்குப் பின் இஸ்ரேலின் திட்டம் என்ன? - நெதன்யாகு புதிய தகவல்

காசா: இஸ்ரேல் - காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார். இச்சூழலில், காசா போருக்கு பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளியிட்டிருக்கிறார். நெதன்யாகு தனது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்த திட்டத்தில் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, போருக்குப் பின்னர் நடக்கவிருக்கும் திட்ட வரையறையை நேதன்யாகு முதன்முறையாக பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில், காசாவை நிர்வகிப்பதில் இஸ்ரேலின் பங்கு என்ன என்பதை நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஹமாஸ் மீதான போர் முடிவடைந்த பின்னர் ராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும். சிவில் விவகாரங்களில் இஸ்ரேல் பங்கு வகிக்கும். பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும். மேலும், காசாவுக்குள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவும். ஆனால், இந்த திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.