கண்டதேவி தேர் வெள்ளோட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் பிப்.11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ள நிலையில், அதைக் கண்காணிக்க தேரோடும் வீதிகளில் சிசிடிவி கேமராக்களை போலீஸார் பொருத்தி உள்ளனர்.
தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில், சிவகங்கை சமஸ் தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறும். தேர்வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையாலும், கும்பாபிஷேக திருப்பணிகள், தேர் பழுதானது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து தேரோட்டம் பல ஆண்டுகளாக தடைப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.