‘ஜல் ஜீவன்’ இனி ‘இனிய குடிநீர்’... - மத்திய அரசின் திட்டங்களை தமிழில் குறிப்பிட தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும்போது வழக்கமாக அவற்றின் பெயர்கள் இந்தியிலேயே கூறப்படுகின்றன. இனிமேல் மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடையே தமிழில் மொழிபெயர்த்து அதிகாரிகள் குறிப்பிடவேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விடுபட்ட திட்டப் பயனாளிகளை சேர்க்கவும் விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி அருகேயுள்ள திம்புநாயக்கன்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மத்திய அரசின் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்தும் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியது: ''புதுச்சேரியில் பழங்குடியின மக்களைக் கவுரவிக்கும் விழாவுக்கு அதிகமானோர் வந்து பெருமைப்படுத்தினர். அரசு இவ்வளவு நல்லது செய்கிறதே என்று பொறுத்துக் கொள்ளாத சிலர் பொறாமையில் விழாவில் பிரச்சினையை ஏற்படுத்தினர். மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் ஆதரவளிப்பதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.