மைக்ரோசாஃப்ட் பக்கம் சாய்ந்த சாம் ஆல்ட்மேன்: சத்யா நாதெள்ளா பகிர்ந்த தகவல் - என்ன நடந்தது?

புதுடெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தில் இருந்து இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரேக் பரோக்மேன் ஆகிய இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவிருப்பதாக மைக்ரோசாஃப்ட் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், "ஓபன் ஏஐ உடனான பார்ட்னர்ஷிப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். எம்மெட் ஷீர் (Emmett Shear ) மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் புதிய தலைமைக் குழுவைப் பற்றி அறிந்து, அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். மைக்ரோசாஃப்ட் இன்சைட்டில் நாங்கள் அறிவித்த அனைத்தையும் தொடர்ந்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபடவிருக்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களுக்கும், பார்ட்னர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டுவோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.