5 மாநில தேர்தல் | ரூ.1,760 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், மது, ரொக்கம் பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களையொட்டி, இதுவரை ரூ.1,760 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், மதுபானங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது. ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானாவில் வரும் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.