தருமபுரி | 50 கி.மீ தூர அலைச்சலுக்கு தீர்வான 1.5 கி.மீ நீள இணைப்பு சாலை - விரைந்து அமைக்க முத்தரசன் வலியுறுத்தல்

தருமபுரி: இரண்டு லட்சம் ஏழை மக்களின் 50 கிலோ மீட்டர் தூர அலைச்சலுக்கு தீர்வு ஏற்படுத்தக் கூடிய 1.5 கிலோ மீட்டர் நீள சாலையை பல ஆண்டுகளாக அமைக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் நேற்று (புதன்) தருமபுரியில் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோம்பேரி பகுதியில் சிறு, சிறு மலைப்பகுதிகள் உள்ளன. இதில், 2 சிறிய மலைகளுக்கு இடையில் கணவாய் போன்ற ஒரு பகுதி உள்ளது. இவ்வழியாக சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிதாக சாலை அமைத்தால் இப்பகுதி மக்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தூர வீண் அலைச்சலை தவிர்க்க முடியும். இந்த சாலை அமைத்துத் தர வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதவிர, பல்வேறு அரசியல் கட்சியினரும் இப்பகுதியில் இணைப்புச் சாலை அமைத்துத் தர வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.