ராகு கேது தோஷம், நாக தோஷம் இவைகளால் வாழ்க்கையில் நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுகிறீர்களா? எல்லா கஷ்டத்திற்கும் தீர்வு தர இந்த 4 விளக்கை ஏற்றினால் போதும்.

ராகு கேது தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், இவைகளை எல்லாம் பொதுப்படையாக சர்ப்ப தோஷம் என்று சொல்லுவார்கள். இந்த தோஷம் ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் இருந்து விட்டால், திருமணம் நடக்காது. அப்படியே அடித்து பிடித்து பரிகாரம் செய்து திருமணம் நடந்தாலும், அந்த திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. வாழ்க்கையில் பல தரப்பட்ட பிரச்சனைகள், பல பக்கத்தில் இருந்து வந்து நம்மை ஒரு வழி ஆக்கிவிடும். இந்த சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஆன்மீகத்தில் நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

pambu-puthu

ஆனால் மிகக் குறைந்த செலவில் இந்த ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்து வந்தால் உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் சர்ப தோஷத்தால் வாழ்க்கையில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது. அது என்ன பரிகாரம் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வம் இருந்தால், பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சர்ப தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்:
வீட்டின் அருகில் பாம்பு புத்து கோவில் எங்கே இருக்கிறது என்று தேடி வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் இந்த பாம்பு புத்து கோவிலுக்கு 4 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த விளக்கு வடக்கு திசை நோக்கி எரிய வேண்டும். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் இந்த நான்கு விளக்கை ஏற்றி வர உங்களுக்கு சர்ப்ப தோஷத்தால் எந்த பாதிப்பும் பெரிய அளவில் வராது. திருமணமாகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். திருமணம் ஆகி இல்லற வாழ்க்கையில் பிரச்சனை எதிர்கொண்டு இருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

இதே செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் உளுந்தினால் செய்யப்பட்ட வடையை உங்கள் கையெல்லாம் தானம் கொடுக்க வேண்டும். இந்த தானத்தை எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம். கோவில்களில் தானம் செய்யலாம். அனாதை ஆசிரமங்களுக்கு, முதியோர் இல்லங்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு, வீதியில் யாசகம் கேட்பவர்களுக்கு இப்படி யாருக்கு வேண்டும் என்றாலும் இந்த உளுந்தினால் செய்யப்பட்ட வடையை உங்கள் கையால் தானம் கொடுப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக கருப்பு உளுந்தில் செய்யப்பட்ட வடையை தானம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கோடி கணக்கில் கடன் சுமை இருந்து உங்களுக்கு தொல்லை தந்தாலும் கூட இந்த ஒரு படம் வீட்டிற்கு வந்தாலே போதும். பெரிய பெரிய கடன் சுமையும் சிறிதாக மறைந்து காணாமலே போகும்.

இந்த வழிபாட்டை எல்லாம் தொடங்குவதற்கு முன்பாக குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று ஒரு முறை உங்கள் குல வழக்கப்படி குலதெய்வத்தை வழிபாடு செய்துவிட்டு, இப்படி ஒரு பரிகாரத்தை செய்யப்போவதாக குலதெய்வத்திடம் சொல்லிவிட்டு, ஒரு அனுமதியை பெற்று வந்த பிறகு இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கினால், ரொம்ப ரொம்ப நல்லது. குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தோடு நாம் தொடங்கும் வேலை நிச்சயம் நமக்கு சீக்கிரத்தில் வெற்றியை கொடுக்கும். நம்பிக்கையோடு ஆன்மீகம் பரிகாரத்தை செய்தால் பலனை உடனடியாக எதிர்பார்க்கலாம்.

The post ராகு கேது தோஷம், நாக தோஷம் இவைகளால் வாழ்க்கையில் நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுகிறீர்களா? எல்லா கஷ்டத்திற்கும் தீர்வு தர இந்த 4 விளக்கை ஏற்றினால் போதும். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.