பெரிய பெரிய பதவி, பணம், அந்தஸ்து இவையெல்லாம் தானாக உங்களைத் தேடி வந்து செல்வாதிபதியான வாழ்க்கையை நீங்கள் வாழ நினைத்தால் ஏலக்காயை தினமும் இப்படி பயன்படுத்துங்கள்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தான் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும். செல்வாதிபதியாக வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர் இரவும் பகலும் அயராது பாடுபட வேண்டும் என்பது உண்மை தான். அப்படி உழைத்தாலும் எல்லோராலும் வர முடிவதில்லை காரணம் அவர்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனுடைய பலன் குறைந்து இருந்தால் அவர்கள் என்ன பாடுபட்டாலும் ஒரு நிலைக்கு மேல் எட்ட முடியாது. இந்த சுக்கிர பகவானுடைய அருளை நாம் முழுமையாக பெற ஆன்மீகம் ஒரு சில தாந்திரீக பரிகார முறை முறைகளை தந்திருக்கிறது. அவற்றுள் ஒன்றான ஏலக்காய் பரிகார முறை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

sukkiran

பெரிய பதவி பணம் அந்தஸ்து அனைத்தையும் பெற
ஏலக்காய் மகாலட்சுமி தாயார் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சுக்கிர பகவானுக்குரிய பொருளாகவும் பார்க்கப்படுகிறது. இந்த ஏலக்காவை முறையாக பயன்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது அளவிற்கு கொண்டு செல்லும். இந்தப் பதிவில் ஏலக்காவை வைத்து நரசிம்மரை வணங்கி சுக்கிரனுடைய அருளை பெற இப்போது நாம் இந்த பரிகாரத்தை செய்ய போகிறோம்.

முதலில் உங்கள் வீட்டில் லட்சுமி நரசிம்மர் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த படத்தை நம் வீட்டில் வைத்து வணங்கலாம். ஒரு மஞ்சள் நிற நூலில் 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காய் வாங்கி மாலையாக கொடுக்க வேண்டும் தொடுத்து இந்த மாலையை லக்ஷ்மி நரசிம்மர் படத்தில் போட்டு இரண்டு நெய் தெய்வம் நேற்று உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு எளிமையான நெய்வேத்தியத்தை படைத்து அவரை மனதார வணங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை தரம் மேன்மேலும் உயர்ந்த வேண்டும் பெருக வேண்டும் என உங்களுடைய எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதை வேண்டிக் கொள்ளுங்கள்.

elakkai-maalai

இந்த மாலை ஒரு நாள் முழுவதும் லட்சுமி நரசிம்மர் படத்தின் மேலே இருக்கட்டும். அடுத்த நாள் இந்த மாலையை எடுத்து அதில் இருக்கும் ஏலக்காவை தினம் தினம் ஒன்றை மட்டும் பிரசாதமாக நீங்கள் உட்கொண்டு வாருங்கள். அதே போல் ஒரு ஏலக்காய் ஒரு ரூபாய் நாணயம் பச்சை கற்பூரம் இதை மூன்றையும் வெற்றிலையில் மடித்து அதை உங்கள் பையில் எப்போதும் இருக்கும் படி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காவை கையில் எடுத்துச் செல்ல முடியாதவர்கள் இதே போல கட்டி சாமி படத்தின் அருகில் வைத்து விடுங்கள். அந்த ஏலக்காவை தினமும் உறங்க செல்வதற்கு முன்பு ஒரு ஏலக்காவை எடுத்து சாப்பிடுங்கள். மறுநாள் காலையில் வெற்றிலை பச்சை கற்பூரம் இரண்டையும் மாற்றி விடுங்கள். இதை தினம் தினம் செய்து வந்தாலே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்வது நிச்சயம்.

அதே போல் இந்த ஏலக்காவை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். வியாபாரம் செய்பவராக இருந்தால் தொழில் செய்யும் இடங்களிலும் வைத்து விடுங்கள். லட்சுமி நரசிம்மர் மீது சாற்றிய இந்த ஏலக்காய் உங்கள் வாழ்க்கையில் தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் அவருடைய ஆசியும் அனுகிரகமும் எப்பொழுதும் உங்களை உயர்த்தும்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது தோஷம், நாக தோஷம் இவைகளால் வாழ்க்கையில் நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுகிறீர்களா? எல்லா கஷ்டத்திற்கும் தீர்வு தர இந்த 4 விளக்கை ஏற்றினால் போதும்.

நம்பிக்கையுடன் லட்சுமி நரசிம்மரை வேண்டி தினம் தினம் ஏலக்காவை உங்கள் வாழ்க்கையில் இதுபோல பயன்படுத்தி வந்து உங்கள் வாழ்க்கையில் எல்லா செல்வமும் வளமும் பெற்று நல்ல நிலையில் வாழ, லக்ஷ்மி நரசிம்மர் நிச்சயம் துணை நிற்பார் என்று கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

The post பெரிய பெரிய பதவி, பணம், அந்தஸ்து இவையெல்லாம் தானாக உங்களைத் தேடி வந்து செல்வாதிபதியான வாழ்க்கையை நீங்கள் வாழ நினைத்தால் ஏலக்காயை தினமும் இப்படி பயன்படுத்துங்கள். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.