தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

சென்னை: ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறாததால், அப்படத்தை தயாரித்த வொண்டர் பார் நிறுவனம், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.