ஏப்.1 முதல் யுபிஐ பரிமாற்றத்துக்கு 1.1% கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்? - ஒரு விளக்கம்

புதுடெல்லி: என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ப்ரீபெய்டு வாலட்களைப் பயன்படுத்தி செலுத்தப்படும், ரூ.2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. மார்ச் 24-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்த மாற்றம் வரும் ஏப்ரல்1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் வசூல் யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற கேள்வியும், குழப்பமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் பல பதிவுகளில் என்பிசியின் பரிந்துரைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஏப்.1-ம் தேதி முதல் அனைவரும் இந்தக் கட்டணச் சுமையை ஏற்கவேண்டியது வருமோ என்று கவலைப்படுகின்றனர். ஆனால், யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை என்பிசிஐயின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.