அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல்: இந்தச் சலுகையை பயனர்கள் பெறுவது எப்படி?
சென்னை: இந்தியாவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது ஏர்டெல் டெலிகாம் நிறுவனம். ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என அனைத்து பயனர்களும் இந்த சலுகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த அறிமுக சலுகையை எப்படி பெறுவது என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்களது 5ஜி டேட்டா சேவையை விரிவு செய்து வருகின்றன. வரும் 2024-ல் நாடு முழுவதும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.