108 வைணவ திவ்ய தேச உலா - 75 | திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயில் 75-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வேம் - பாவம், கடா - அழித்தல், ஈஸ்வரா - மிகப் பெரிய கடவுள் என்று பொருள் தருவதால் பெருமாள் வெங்கடேஸ்வரா என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீநிவாசன், பாலாஜி, வேங்கடவன், கோவிந்தன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் பெருமாளை தரிசிக்க எப்போதும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பர்.

கடல் மட்டத்தில் இருந்து 853 மீ உயரத்தில் உள்ள திருமலை, சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய 7 மலைகளைக் கொண்டிருப்பதால் வெங்கடாஜலபதி ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.