IPL லிருந்து விலகிய டுவைன் பிராவோ…, மீண்டும் இணைத்துக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!!

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான, மினி ஏலத்தை எதிர்நோக்கி அனைவரது கவனமும் இருக்கிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, ஐபிஎல் சீசன் ஆரம்பமானது (2008) முதல் டுவைன் பிராவோ தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இதில், 2011-2015 மற்றும் 2018-2022 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டுவைன் பிராவோ தற்போது தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரது ஓய்வை ஏற்று, மீண்டும் தங்களுடனே இணைத்துள்ளது. அதாவது, டுவைன் பிராவோவை அடுத்த சீசனில்(2023) இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. தனது ஓய்வு மற்றும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து டுவைன் பிராவோ, ஒரு புதிய பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஒரு வீரராக இருந்து பயிற்சியாளராக மாறுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

வரலாறு படைத்த ருதுராஜ் கெய்க்வாட்…, விஜய் ஹசாரே டிராபியில் தொடரும் சாதனை!!

நான் விளையாடும் போதே, பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சாளர்களை உயர்த்தி வைக்க வேண்டும் என திட்டமிடுவேன். அதனை செய்ய, இனி முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், ஐபிஎல் மூலம், பல முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளேன். மீண்டும் ஐபிஎல்-லில் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவர், ஐபிஎலை பொறுத்தவரை 161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் 144 போட்டிகளில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தி 1556 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

The post IPL லிருந்து விலகிய டுவைன் பிராவோ…, மீண்டும் இணைத்துக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.