தத்துப்பிள்ளைகளுக்கும் பெற்றோரின் வேலையைப் பெற உரிமை உண்டு - கர்நாடகா உயர் நீதிமன்றம்

பெங்களூரு: பெற்ற குழந்தைகளைப் போல கருணை அடிப்படையில் பெற்றோர்களின் வேலையினை பெற தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பெற்ற குழந்தை தத்துக்குழந்தை என்று வேற்றுமை கடைபிடித்தால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்றும் கூறியுள்ளது.

மறைந்த தந்தையின் வேலையை கருணையின் அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் என்று தத்துப்பிள்ளை ஒருவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவினை விசாரணை செய்த கர்நாடகா உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், "ஒரு மகன், மகள் அவர்கள் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும், தத்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளே. இதில் சொந்த பிள்ளை, தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என்ற வேறுபாடு காட்டினால் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கான எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். இது அரசியலமைப்பு பிரிவு 14 - ஐ மீறும் செயலாக இருக்கும் என்பதால் செயற்கையாக பாரபட்சம் காட்டும் விதி மாற்றியமைக்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.