“நாட்டில் அதிகரிக்கும் வேலையின்மை. நாம் செய்ய வேண்டியது...” - ஆனந்த் மகேந்திரா கருத்து
புதுடெல்லி: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போதைய சூழலில் உலகலாவிய காரணிகளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது அவசியம்" என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, "அரசாங்கம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. தனியார் துறையில் அவை கீழ்மட்ட அளவிலும், பகுதிநேர அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே உருவாக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவிற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் முதன்மையானது, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை. சிஎம்ஐஇ (சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியான் எக்கானாமி) தகவல்படி, இந்தியாவின் வேலைவாய்ப்பு இல்லாத நிலை 7-8 சதவீதமாக இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு இணையாக வேலை வாய்ப்பு வளர்ச்சி இல்லாததே இதற்கு காரணம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.