சொத்தை வித்துட்டுதான் சிவகார்த்திகேயனிடம் போகனும்..! அப்படி என்ன ஆதங்கம்-னு தெரியலயே மன்சூர்க்கு..

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் சமீபத்தில் வெளியான டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

siva1_cine

மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் , அஜித் இவர்களுக்கு பிறகு ரசிகர்களிடம் தனி மரியாதை உள்ள நடிகராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என அனைத்து பரிமாணங்களிலும் ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தன் ஆதங்கத்தை ஒரு மேடையில் கொட்டி தீர்த்தார். அதாவது இப்ப எல்லாம் சின்ன படங்களை ரசிகர்கள் யாரும் பார்ப்பதில்லை. கையில பணத்தை சம்பாதித்து வைத்துக் கொண்டு விஜய் படம் வருமா? அஜித் படம் வருமா? என காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

siva2_cine

அவர்களுக்கு அப்படி என்றால் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன்.  எத்தியோப்பியா, சோமாலியா என ஊர் முழுவதும் சுற்றி மலமா பித்தா பித்தாதே -னு பாட்டை கண்டுபிடிச்சு போட்டுருக்கான். பாட்டுல phd பண்ணிருப்பானு நினைக்கிறேன். இருக்கிற சொத்தை வித்துக் கொண்டு தான் அவரிடம் போக வேண்டும் போல. அந்த அளவுக்கு பெரிய ஆளாயிட்டாருனு என கூறினார். இவர் கூறுவதை பார்த்தால் பெருமையாக சொன்னாரா இல்லை கடுப்புல சொன்னாரா என தெரியவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.