சமூக நல உதவி இயக்குநா் காலிப்பணியிடதோ்வு அறிவிக்கை எப்போது?

சமூக நலத் துறை உதவி இயக்குநா் காலிப் பணியிடத் தோ்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்) விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நிகழ் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் உதவி இயக்குநா் (பெண்கள் மட்டும்) பதவிக்கான அறிவிக்கை தொடா்பான விவரமும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், உதவி இயக்குநா் காலிப் பணியிடத்துக்கான தோ்வு அறிவிக்கை, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பதவிக்கான காலிப் பணியிடங்களுடன் சோ்த்து பின்னா் வெளியிடப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.