Ramayana Update : “முதல் பாகத்தில் சந்திப்பு இல்லை” – ரன்பீர் பற்றி ஓப்பனாக பேசிய யஷ்; ராமாயணம் 2-வில் தான் அந்த வெறித்தனமான மோதல்!

இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட படைப்பு ‘ராமாயணம்’ (Ramayana). நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் (Ranbir Kapoor), ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ்ஷும் (Yash) நடிக்கின்றனர். இரண்டு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் இணைவதால், இவர்களுக்கு இடையேயான மோதல் காட்சிகள் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால், ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பிற்கு ஒரு சிறிய ட்விஸ்ட் கொடுத்துள்ளார் யஷ்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய யஷ், ராமாயணம் முதல் பாகத்தில் தானும் ரன்பீர் கபூரும் ஒரே திரையில் தோன்றப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “ரன்பீரும் நானும் ராமாயணம் முதல் பாகத்தில் இணைந்து நடிக்கவில்லை. ராவணனுக்கு என்று தனி ராஜ்ஜியம் இருக்கிறது, ராமனுக்கு என்று தனி ராஜ்ஜியம் இருக்கிறது. கதைப்படி அவர்கள் இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு முதல் பாகத்தில் இல்லை. நாங்கள் இருவரும் ராமாயணம் 2-வில் தான் நேருக்கு நேர் சந்திப்போம்” என்று யஷ் தெரிவித்துள்ளார்.

ராமாயணம் முதல் பாகம் முழுக்க முழுக்க ராமரின் பயணம் மற்றும் ராவணனின் பின்னணியை தனித்தனியாகக் காட்டும் வகையில் அமையவுள்ளது.

Side-by-side portrait of Rocking Star Yash and actor Ranbir Kapoor, the lead stars of Nitesh Tiwaris epic Ramayana.
ரன்பீர் – யஷ் மோதல் எப்போது? ‘ராமாயணம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட ராவணன்!

ரன்பீர் கபூர் பற்றிப் பேசிய யஷ், “நாங்கள் நிஜ வாழ்க்கையில் சில முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். அவர் ஒரு அற்புதமான நடிகர்” என்று பாராட்டியுள்ளார். 2024 மற்றும் 2025-ல் வெளியான பல பெரிய பட்ஜெட் படங்கள் ‘பான்-இந்தியா’ அளவில் சக்கைப்போடு போட்ட நிலையில், 2026-ன் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இந்த ‘ராமாயணம்’ உருவெடுத்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி அமைத்திருப்பது கூடுதல் பலம்.

ராவணனாக யஷ்ஷின் மிரட்டலான லுக் மற்றும் ராமராக ரன்பீரின் சாந்தமான தோற்றம் என இரண்டு துருவங்களை ஒரே படத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். ஆனால், அந்த மெகா மோதலைப் பார்க்க நாம் இரண்டாம் பாகம் வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலவரம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.