IPL 2023 | ‘பேட்டிங் மட்டும் தான்’ - பென் ஸ்டோக்ஸின் நிலை

சென்னை: இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் ரூ.16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போட்டி தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் தொடக்க ஆட்டங்களில் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார் என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பென் ஸ்டோக்ஸின் உடற்தகுதி விஷயத்தில் சிஎஸ்கே மருத்துவக்குழுவும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவக்குழுவும் நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறோம். ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக களமிறங்க தயாராக உள்ளார். அவர், பந்து வீச்சுக்கு தயாராவதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.