சிறகடிக்க ஆசை ஒரே எபிசோட்டில் எத்தன ட்விஸ்ட்டு அப்பப்பா!! அடுத்து என்ன நடக்க போகுதோ?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. 

சிந்தாமணியின் மகள் ரேகாவை சத்யா காதலித்து வருகிறார். ஆனால் மீனா மற்றும் சிந்தாமணிக்கு இருக்கும் பிரச்சனையால் ரேகா இதுவரை இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஒருவழியாக அந்த உண்மையை சத்யாவிடம் சொல்லிவிட்டார்.

இதை தொடர்ந்து இருவரும் மீனா மற்றும் முத்துவை பார்த்து இந்த உண்மையை சொல்ல இருக்கின்றனர். அப்போது அவர்களிடம் நாங்கள் காதலிக்கிறோம் எனக் கூற முத்து எங்களுக்கு இது முன்னவே தெரியும் என்கிறார். மீனா உங்க வீட்டுல இதுக்கு ஒத்துப்பாங்களா எனக் கேட்க அம்மா தான் பிரச்சனை என்கிறார் ரேகா.

மீனா நான் வந்து பேசுகிறேன் எனக் கூற நீங்க வந்தா ஒத்துக்கவே மாட்டாங்க எனக் கூறி அவர் சிந்தாமணி மகள் என்ற உண்மையை சொல்லிவிடுகிறார். இதில் அதிரும் மீனா சத்யாவிடம் இந்த காதல் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். 

ஆனால் முத்து இவர்கள் உண்மையிலேயே பாசமாக இருக்கிறார்கள். ஏன் அப்படி சொல்ற ரேகாவிடம் உங்க வீட்டை எதிர்த்துவருவியா எனக் கேட்க வந்துவிடுகிறேன் என்கிறார். இதனால் அடுத்தடுத்த எபிசோட்டில் சிந்தாமணியை எதிர்த்து இந்த ஜோடி கல்யாணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது மட்டுமல்லாமல் மனோஜ் ஜோடியாக டேட்டிங் செல்ல வசமாக ரோகிணியிடம் சிக்கிவிடுகிறார். ஹரிணிக்கு வாந்தி வர அவரை நிறுத்திவிட்டு சோடா வாங்க செல்கிறார். அப்போது அவரிடம் பேச்சு கொடுத்து நிச்சயம் நடந்த உண்மையை தெரிந்து கொள்கிறார்.

இதனால் இனி ரோகிணியின் ஆட்டம் பலமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதால் ரோகிணியின் வில்லத்தனமே இந்த ரூட்டில் செமையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.