வினோத் காம்ப்ளிக்கு என்ன ஆச்சு? மனைவி ஆண்ட்ரியா கூறிய விளக்கம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சமீபகாலமாகப் பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். இந்நிலையில், காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா ஹெவிட் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
ஆண்ட்ரியா கூறுகையில், "கடவுளின் அருளால் வினோத் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து யாரோ தவறான தகவல்களை பரப்புகிறார்கள்," என்று கூறி வதந்திகளை மறுத்துள்ளார்.
முன்னதாக, காம்ப்ளியின் நண்பர் மார்கஸ் கூட்டோ ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அவருக்கு நிதியுதவி மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவை திரட்டி வருவதாகவும், காம்ப்ளியின் நினைவாற்றல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், சச்சின் டெண்டுல்கரும் தனது நீண்டகால நண்பருக்கு உதவ முன்வந்துள்ளதாக கூறப்பட்டது.
காம்ப்ளி மது அருந்துவதை நிறுத்திவிட்டதாகவும், ஆனால் அவரது மூளை நரம்பியல் தொடர்பாக சில பாதிப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். எனினும், தற்போது அவரது மனைவி அளித்துள்ள இந்த நேர்மறையான விளக்கம் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.