செயற்கை மின்தடையை உருவாக்கி ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

நாளையுடன் தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை இன்று திருப்பூர் பல்லடம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.�

அப்பொழுது, நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருக்கிறோம் ஆனால் செயற்கையாக மின்தடையை ஏற்படுத்தி திமுக ஓட்டிற்கு பணம் கொடுத்து வருகிறது. உலக நாடுகள் இடையே பேசக்கூடிய தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் மேலும் மூன்றாவது உலகப்போரை தடுக்கும் திறன் கொண்ட ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டும் தான்! இன்று கூட ஈரான் மற்றும் இஸ்ரேல் என இரு நாடுகளிடையே பேசக்கூடிய ஒரே தலைவராக மோடி இருக்கிறார்.�

மேலும் மத்திய அரசு இதுவரை 15 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலையில் குறைத்துள்ளது. ஆனால் மாநில அரசு கடந்த தேர்தலின் பொழுது பெட்ரோல், டீசல் விலையில் ஐந்து ரூபாய் வரை குறைப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார்கள் இருப்பினும் நிறைவேற்றவில்லை என்று பேசியுள்ளார்.�

Source : Dinamalar�

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.