வாராணசி தொகுதியின் தேர்தல் அதிகாரி தமிழர் ராஜலிங்கம்

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் நேற்று தனது இரு கரங்களை கூப்பி வணங்கி வேட்புமனுவை பிரதமர் மோடி தாக்கல் செய்தார். இதை தேர்தல் அதிகாரியாக இருந்து பெற்றுக்கொண்ட ஐஏஎஸ் அதிகாரியான ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் ஒரு தமிழர் ஆவார். வாராணசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி, சரியாக நண்பகல் 12.00 மணிக்கு நுழைந்தார்.

அவருடன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி மனுவின் பரிந்துரையாளர்கள் நால்வர் உடன் இருந்தனர். தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஆட்சியர் ராஜலிங்கம் முன்பாக நேராக சென்று பணிவுடன் நின்றார் பிரதமர் மோடி. தனது இருகரங்களைக் கூப்பி வணங்கியவர் தனது வேட்பு மனுவை ஆட்சியரிடம் அளித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.