“மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் பேச்சு நடத்தியது எதைக் காட்டுகிறது?” - ப.சிதம்பரம்

சென்னை: “பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரை எலான் மஸ்க் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?” என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் (முன்பு ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக தகவல் வெளியானது. இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன் பிறகு, எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்தார். இதன் தொடர்ச்சியாக அவர், ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு திடீா் பயணம் மேற்கொண்டார். அதோடு, அந்நாட்டு பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.