சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம் @ ஐகோர்ட்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சந்நதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கோவிந்தராஜ பெருமாள் சந்நதி உள்ளது. இந்த கோயிலில் மே 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்த இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 400 ஆண்டுளாக இந்த கோயிலில் பிரம்மோற்சவம் ஏதும் நடத்தப்படவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.