கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு: டிரோன் கேமரா, பலூன் பறக்க தடை

திண்டுக்கல்: கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க வருகை தந்துள்ளதை அடுத்து டிரோன் கேமரா, பலூன் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் (ஏப்.29) வந்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கொடைக்கானலில் குடும்பத்தினருடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இன்று (ஏப்.29) காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தனது மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மருமகள் கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் புறப்பட்டு மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் பிற்பகல் 1 மணிக்கு கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.