மதுரை ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தில் தொழிற்சாலை நிலங்கள் மறுசீரமைக்கப்படுமா?

மதுரை: மதுரை ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தில் தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்கள், தற்போது விவசாய பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்காக மாற்றப்பட்ட நிலையில், நீக்கப்பட்ட அந்த சர்வே எண்களை மீண்டும் சேர்க்க, பாதிக்கப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களை மடீட்சியா அழைக்கிறது. அவற்றை அவர்கள் வழங்கும் பட்சத்தில் அவற்றை அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு வரும் 10-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டம் பற்றிய கருத்துக் கேட்பு கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில் துணை இயக்குநர் விளக்கத்துடன் கடந்த மார்ச் 6-ம் தேதி நடைபெற்றது. அதற்கு முன் ஏற்கெனவே, ஒரு தனியார் மண்டபத்தில் இக்கூட்டம் வெளியே தெரியாமல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளிப்படையாக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.