பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி நியமனம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட், டி 20 போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேனும், இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது பயிற்சியாளராக இருந்தவருமான கேரி கிர்ஸ்டனும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லெஸ்பியையும் பயிற்சியாளர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இவர்களுடன் அனைத்து வடிவிலான போட்டிக்கும் துணை பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அசார் முகமது செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.