முதல் இரண்டு கட்ட தேர்தலில் பெண் வேட்பாளர்கள் 8% மட்டுமே போட்டி: அர்த்தமுள்ள மாற்றம் தேவை என கருத்து

புதுடெல்லி: மக்களவைக்கு நடைபெற்ற முதல் 2 கட்ட தேர்தலில், வெறும் 8 சதவீத பெண் வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். இந்த குறைவான எண்ணிக்கை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசியல் கட்சிகளின் தயக்கத்தை காட்டுவதாக உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்களவைக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றன. இந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 2,823 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 235 பேர் பெண்கள். இது வெறும் 8 சதவீதம் மட்டுமே். தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, பெண்களை முன்னிறுத்துவதில் அரசியல் கட்சிகளின் தயக்கத்தை காட்டுவதாக உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.