ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு | சிபிசிஐடி வசம் ஆவணங்கள் ஒப்படைப்பு: விரைவில் விசாரணை தொடங்குகிறது

சென்னை: நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் அப்பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த 6-ம் தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, அந்த ரயிலில் ‘எஸ் 7’ பெட்டியில் பயணம் செய்த, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களான சென்னை கொளத்தூர் திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேரும் வைத்திருந்த 6 பைகளை சோதனையிட்டதில், ஆவணமின்றி கொண்டு சென்ற சுமார் ரூ.4 கோடி (ரூ.3 கோடியே 98 லட்சத்து 91,500) பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.