மிதுனம்: `12 -ல் குரு தரப்போகும் பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 கணித்தவர் கே.பி. வித்யாதரன்

இதுவரை லாபஸ்தானத்தில் அமர்ந்து பணவரவில் தடையில்லாமல் பார்த்துக்கொண்டு வாழ்வை சீராக ஓட்ட உதவிய குருபகவான் மே 1 -ம் தேதி முதல் 12 - ம் இடமான விரையஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இனி எதிலும் சிக்கனம் தேவை. குருபகவான் சுப செலவுகளைத் தருவார். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் வரிசைகட்டும். பிள்ளைகளின் திருமணம் மற்றும் மேற்படிப்புக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வீண் கௌரவத்துக்காகச் செலவு செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். குடும்பத்தினரை அரவணைத்துச் செல்லுங்கள். அவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

உங்கள் பணிகளை நீங்களே முடித்துவிடுங்கள். மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். என்றாலும் நினைத்த காரியத்தை முடிப்பதற்குள் பல்வேறு தடங்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் அது உங்களுக்கு வெற்றியாக அமையும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். உங்கள் பிரச்னைகளுக்கான ஆதரவு சமூக ஊடகங்களில் கிடைக்காது என்பதை உணர்ந்து அளவோடு பகிருங்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் பிறக்கும். கோயில் குளங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவான்

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் தன் 5 -ம் பார்வையாக உங்கள் சுகஸ்தானமான கன்னியில் விழுவதால் தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். சிலர் புது வீட்டுக்குக் குடிபோவார்கள்.

குருபகவான் 6-ம் வீடான விருச்சிகத்தை 7 ம் பார்வையாகப் பார்ப்பதால் அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் தொடர்பாக இருந்த கவலைகள் நீங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. எதிர்கள் அடங்குவார்கள்.

குருபகவான் 8-ம் வீடான மகரத்தைப் பார்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும். பெரிய நோய் இருந்துபோன்ற கவலைகள் மறையும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.5.24 முதல் 12.6.24 வரை குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் சாதகமான பலன்கள் கிடைக்கும். சகோதரர்களுடன் நல்லுறவு வாய்க்கும். அவருக்குத் திருமணம் அமையும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப்பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

12.6. 24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை பிறக்கும் சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

மிதுனம்

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை குருபகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். வீடு மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அதற்காகச் சிலர் கடன் வாங்குவீர்கள். என்றாலும் எதிர்மறையான சிந்தனைகளை விட்டுவிடுங்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாட்டி மேற்கொள்ளுங்கள்.

வியாபாரம்

வியாபாரத்தில் இதுவரை இருந்ததுபோன்ற பெரும் லாபம் இருக்க வாய்ப்பில்லை. எனவே சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். கொள்முதல் செய்யும்போது சந்தை நிலவரம் அறிந்து செய்யுங்கள். வாடிக்கையாளர்களிடம் இனிமையாகப் பேசிப் பழகுங்கள். பணியாளர்களிடம் கண்டிப்பு தேவை. பிரச்னை தரும் பணியாளர்களை மாற்றத் தயங்காதீர்கள். பங்குதாரர்களும் நிறைய பிரச்னை கொடுப்பார்கள். என்றாலும் சலுகை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கண்டிப்பு காட்டுங்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள். அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.

நவகிரகங்கள்

உத்தியோகம் :

இதுவரை வேலையில் தானு உண்டு தன் வேலையுண்டு என்று இருந்த உங்களுக்குக் கடுமையான பணிச்சுமை காத்திருக்கிறது. எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று புலம்ப ஆரம்பிப்பீர்கள். என்றாலும் அவசரப்பட்டு எதையும் சொல்லிவிட வேண்டாம். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதைப் போல் பேசினாலும் அளவுக்கு அதிகமாகப் பணி செய்ய வைக்கவே அப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிந்து மனம் வருந்துவீர்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டு. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பதை எதிர்பார்க்க முடியாது. கலைஞர்கள் குறித்த வீண் வதந்திகள் ஓயும். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் ஓய்வில்லாமல் உழைக்க வைத்து அடுத்த கட்டத்துக்கு உங்களை தயார் படுத்தும்,

பரிகாரம்: புனர்பூசம் நட்சத்திர நாளில் நவகிரக குருவுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.