“மத்தியில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்தால்தான்...” - சீமான் பேச்சு

திருவண்ணாமலை: ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கு.பாக்கியலட்சுமியை ஆதரித்து, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் முன்பு, மைக் சின்னத்துக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சாதனை செய்திருந்தால் தனித்து நின்று, தங்கள் சாதனைகளை கூறி வாக்கு கேட்டிருக்கலாமே. காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் பொருளாதார கொள்கையும் ஒன்றே. அது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகும். ‘நீட்’ மற்றும் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது காங்கிரஸ். உடனிருந்தது திமுக. செயல்படுத்தியது பாஜக. கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி. அதை வேடிக்கை பார்த்தது திமுக.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.