‘Varshangalkku Shesham’ Review: கோடம்பாக்கம் கதைக்களத்தில் நிறைவு கிட்டியதா?

தனது கனவுகளை வெள்ளித்திரையில் ஒளிரவைக்க கோடம்பாக்கம் நோக்கி புறப்படும் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நிகழும் ஏற்ற, இறக்க திரையுலக பயணமே வருடங்களுக்குப் பிறகு என்று பொருள்படும் ‘வருஷங்களுக்கு சேஷம்’ (Varshangalkku Shesham) மலையாள படத்தின் ஒன்லைன்.

கேரளாவின் குக்கிராமத்தில் 70-களில் தொடங்கும் கதையில் கல்வியில் நாட்டமில்லாத வாசு (தயான் ஸ்ரீனிவாசன்) கலையின் பக்கம் தன் கவனத்தை திருப்புகிறார். எழுத்தில் ஆர்வம் கொண்டும் திரியும் அவரையும், இசையில் ஆர்வம் கொண்டிருக்கும் முரளியையும் (பிரணவ் மோகன்லால்) காலம் ஒன்று சேர்க்கிறது. திரையுலகில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் கொண்ட இருவரும் கேரளாவிலிருந்து புறப்பட்டு சினிமாவின் கூடாரமான கோடம்பாக்கத்துக்குள் நுழைகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.