CSK வில் வெடித்த புது பிரச்சனை.., யாருக்கு அந்த இடம்.., அணி நிர்வாகம் எடுக்கும் முடிவு என்ன??
ஐபிஎல் 2023 தொடர்களுக்கான இறுதிப்போட்டியில் CSK அணி அதிரடியாக விளையாடி குஜராத் அணியை வீழ்த்தி 5 வது முறையாக வெற்றி வாகை சூடியது. CSK வின் வெற்றியை அணி வீரர்கள் மட்டும் இல்லாமல் உலகெங்கும் உள்ள அனைத்து ரசிகர்களும் இப்போது வரை கொண்டாடி வருகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் ஜடேஜா அடித்த பவுண்டரி, சிக்சர் தான் இந்த வெற்றிக்கு காரணம் என அனைவரும் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி வெற்றியின் மிதப்பில் இருக்கும் CSK அணியில் இப்போது புது பிரச்சனை உருவாகியுள்ளது. அதாவது இந்த சீசனில் அதிரடியாக விளையாடிய அம்பத்தி ராயுடு IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது இடத்திற்கு அடுத்த சீசனில் யார் வருவார் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் அம்பத்தி ராயுடு இடத்திற்கு ஷேக் ரஷீத், சேனாபதி, நிஷாந்த் சிந்து, பென் ஸ்டோக்ஸ் ஆகிய வீரர்கள் போட்டி போடுகின்றனர்.
“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் வழங்கப்படும்”…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்த வீரர்கள் அனைவரும் இதுவரை நடைபெற்ற IPL தொடரில் அதிரடியாக விளையாடி உள்ளனர். இதில் யார் அம்பத்தி ராயுடு இடத்தை பிடிக்க போகிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் CSK ரசிகர்கள் அனைவரும் பென் ஸ்டோக்கை, அம்பத்தி ராயுடு இடத்திற்கு கொண்டு வந்தால் அடுத்த சீசனில் சென்னை அணியில் பல மாற்றங்கள் நிகழலாம் என கூறி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் CSK அணி நிர்வாகம் என்ன முடிவு எடுப்பார்கள் என பார்க்கலாம்.
The post CSK வில் வெடித்த புது பிரச்சனை.., யாருக்கு அந்த இடம்.., அணி நிர்வாகம் எடுக்கும் முடிவு என்ன?? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.