இன்றைய ராம நவமி நாளில் ஒரே ஒரு ரூபாயை வைத்து இந்த பூஜையை மட்டும் செய்து விடுங்கள். இந்த ஒரு ரூபாயை வைத்து நீங்கள் ஒரு கோடி வரை சம்பாதிக்கும் யோகத்தை பெறலாம்.

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய அந்நாளில் மகா விஷ்ணுவானவர் ராம அவதாரம் எடுத்ததால் அந்த நாளை நாம் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடி வருகிறோம். விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரமாக ராம அவதாரத்தை சொல்லலாம். இந்த ராம அவதாரத்தை பெருமாள் கோவில்களில் ராம நவமியாக மிக விமர்சையாக கொண்டாடுவார்கள். அப்படியான இந்த ராம நவமி நாளில் நாம் வீட்டில் செய்யப்படும் ஒரு சின்ன வழிபாட்டின் மூலம் நம்முடைய பண கஷ்டத்தை போக்கிக் கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ramar locket

பணவரவு அதிகரிக்க ராமநவமியில் செய்ய வேண்டியவை:
ராம நவமி அன்று செய்யப்படும் இந்த பூஜையை மாலை வேளையில் செய்வது மிகவும் நல்லது. இந்த பூஜை செய்வதற்கு நெய்வேத்தியமாக நீர் மோர், பானகம் போன்றவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் ராமர் விக்ரகம் அல்லது ராமர் படம் பதித்த டாலர் போன்றவை இருந்தால் கூட அதையும் இந்த பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வேளை உங்களிடம் எதுவும் இல்லை எனும் பட்சத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை ஸ்ரீ ராமராகவே மனதில் நினைத்துக் கொண்டு ஒரு தாம்பாள தட்டில் இந்த ஒரு ரூபாய் நாணயத்தையே வைத்து வணங்கலாம். விக்ரகங்கள் இருப்பவர்கள் விக்கிரகங்களுடன் இந்த ஒரு ரூபாயை வைத்து வணங்கிக் வேண்டும்.

abisegam

இந்த பூஜை செய்வதற்கு முன் பூஜை அறையில் முதலில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஸ்ரீ ராமருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதாவது பால், தயிர், நெய், தேன், சர்க்கரை இந்த ஐந்து பொருட்களாலும் அபிசேகம் செய்ய வேண்டும். விக்ரகம் இருந்தால் அதற்கு அபிசேகம் செய்ய வேண்டும். விக்ரகம் இல்லாத பட்சத்தில் இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு செய்து விடுங்கள். அபிஷேகம் செய்த பிறகு இந்த நாணயத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பின் ஒரு வெற்றிலையின் மீது இந்த ஒரு ரூபாயை வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் தயார் செய்து வைத்த நெய்வேத்தியங்களை வைத்து தீபாராதனை காட்டி பூஜை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் ஸ்ரீ ராம ஜெயம் என்னும் ராம நாமத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.

இந்த பூஜை செய்த அடுத்த நாள் நீங்கள் பூஜையறையில் வைத்து வணங்கிய அந்த ஒரு ரூபாயை மட்டும் ஒரு துணியில் மூட்டையாக கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடங்களில் இந்த நாணயத்தை வைத்து விட்டால் போதும். இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கும் இடத்தில் நல்ல பண வரவும் வியாபார ஸ்தலமாக இருந்தால் அங்கு வியாபாரமும், நீங்கள் தொழில் புரிவதாக இருந்தால் உங்களுக்கு தொழில் பெருக்கமும், வீட்டில் வைத்தால் உங்களில் வருமானமும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: கோவிலில் இருந்து கொண்டு வரும் இந்த பொருளை மட்டும் பிறருக்கு தரவே கூடாது. இதனால் உங்களுடன் வீட்டிற்கு வந்த தெய்வம் வெளியேறி விடும்.

இந்த ராம நவமி நாளை தவற விடாமல் இந்த எளிய பூஜையை செய்து உங்களின் பண தேவைகள் அனைத்தையும் தீர்க்க ராமரின் பரிபூரண அருளாசியை பெற்று கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

The post இன்றைய ராம நவமி நாளில் ஒரே ஒரு ரூபாயை வைத்து இந்த பூஜையை மட்டும் செய்து விடுங்கள். இந்த ஒரு ரூபாயை வைத்து நீங்கள் ஒரு கோடி வரை சம்பாதிக்கும் யோகத்தை பெறலாம். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.