வடபழனி கோயிலில் தைப்பூச திருவிழா: நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை: சென்னை வடபழனி முருகன்கோயிலில், தைப்பூசம் திருவிழாகோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம்அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மூலவர், உற்சவருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணி அளவில் வடபழனி ஆண்டவர் 4 மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், 2-ம் நாளான நேற்றும் காலை முதல்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடபழனி கோயிலில் குவிந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.