கே எல் ராகுலுக்கு ஓய்வு கொடுத்த பிசிசிஐ…, இதுக்கு தான் இந்த திடீர் முடிவா??

இந்திய கிரிக்கெட் வாரியமானது (பிசிசிஐ) அடுத்த ஆண்டு கே எல் ராகுலுக்கு அணியில் இருந்து ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே எல் ராகுல்:

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முடித்த கையோடு, பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இங்கு இந்திய அணி, பங்களாதேஷிற்கு எதிராக, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது. இந்த தொடருக்காக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், பிசிசிஐயானது ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தனிப்பட்ட காரணத்திற்காக கே எல் ராகுலுக்கு அடுத்த ஆண்டு விடுமுறை அளித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் கே எல் ராகுலின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியானது. கே எல் ராகுலுக்கும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் மற்றும் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தேதி குறிப்பிடாமல் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

புரோ கபடி: காலிறுதிக்கு முன்னேற தமிழ் தலைவாஸ் அணிக்கு வாய்ப்பு இருக்கா?? முழு விவரம் உள்ளே!!

இதன் காரணமாக தான், பிசிசிஐயானது, கே எல் ராகுலுக்கு விடுமுறை அளித்திருக்க கூடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இதனால், ஜனவரி மாதம் தனது சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ள இந்திய அணியில் கே எல் ராகுல் இடம்பெற மாட்டார் என தெரிகிறது.

The post கே எல் ராகுலுக்கு ஓய்வு கொடுத்த பிசிசிஐ…, இதுக்கு தான் இந்த திடீர் முடிவா?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.