5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த மகாராஷ்டிரா…, 2வது முறையாக டிராபியை தட்டி தூக்கிய சௌராஷ்டிரா !!

விஜய் ஹசாரே டிராபியின் இறுதி போட்டியில், மகாராஷ்டிரா அணியை 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது முறையாக, சௌராஷ்டிரா அணி டிராபியை தட்டி சென்றது.

விஜய் ஹசாரே டிராபி:

விஜய் ஹசாரே டிராபியின் இறுதி போட்டியில், சௌராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய, மகாராஷ்டிரா அணியில், பவன் ஷா 4 ரன்களில் வெளியேற, சத்யஜீத் பச்சாவ் (27), அங்கித் பாவ்னே (16) அசிம் காசி (37) என அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து(108) ரன் அவுட் ஆனார்.

டெலிக்ராம்:  Enewz Tamil டெலிக்ராம்

இதனால், 50 ஓவர் முடிவில், மகாராஷ்டிரா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்திருந்தது. சௌராஷ்டிரா சார்பாக சிராக் ஜானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சௌராஷ்டிரா அணியில், ஹர்விக் தேசாய் மற்றும் ஷெல்டன் ஜாக்சன் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில், ஹர்விக் தேசாய் 50 ரன்களில் வெளியேற, இவரை தொடர்ந்து வந்தவர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப் பதக்கங்களை அள்ளிய ஒலிம்பிக் நாயகி!!

இறுதி வரை, நிலைத்து நின்று விளையாடிய, ஷெல்டன் ஜாக்சன் 133* மற்றும் சிராக் ஜானி 30* எடுத்து, 46.3 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு, இலக்கை அடைந்து சௌராஷ்டிரா அணி வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்த வெற்றியால், 2 வது முறையாக சௌராஷ்டிரா அணி விஜய் ஹசாரே டிராபியை வென்று அசத்தியுள்ளது.

The post 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த மகாராஷ்டிரா…, 2வது முறையாக டிராபியை தட்டி தூக்கிய சௌராஷ்டிரா !! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.