தலையில் கல்லை போட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை! - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரிக்கும் போலீஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (50). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நாள்தோறும் புக்குளத்திலிருந்து உடுமலைக்கு பேருந்தில் சென்றுவிட்டு மீண்டும் புக்குளத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை (நேற்றிரவு) புக்குளத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்த நிலையில், இன்று காலை அந்தப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்த சிலர், அங்கு தனலட்சுமி தலையில் கல்லைப் போட்டு... அவரைக் கொலைசெய்திருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றனர்.

கொலை

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த உடுமலை போலீஸார், தனலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புக்குளம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.