பிரதமர் மோடியை மம்தா சந்தித்த பின்னணி என்ன? - விளக்கம் அளிக்க கோரும் மேற்குவங்க பாஜகவினர்

புதுடெல்லி: மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்ததின் பின்னணி குறித்து பிரதமர் விளக்க வேண்டும் என்று மேற்குவங்க மாநில பாஜக.வினர் கோரியுள்ளனர்.

மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாஜக.வை கடுமையாக விமர்சிப்பவர் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. மேலும், மேற்கு வங்கத்துக்கு வருகை தரும்போது பிரதமர் மோடியை சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் மம்தா. இந்நிலையில், இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க 2 நாட்களுக்கு முன்னரே மம்தா டெல்லி வந்துவிட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.