இந்திய அணிக்கு அபராதம்


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் தோல்வியை தழுவியது. பேர்ஸ்டோ ரூட் அபாரமாக ஆடி சதமடித்து வெற்றிக்கு வித்திட்டனர். 

குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டு பந்து வீசியதால் இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியளிலும் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.