புதுக்கோட்டையில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி: விளையாட்டு துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான வாலிபால் போட்டி வரும் 8-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. போட்டியை மாநில விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கவுள்ளார்.

வடகாடு காவல் நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் இரவு நேரத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக அணிகள் கலந்துகொள்ள உள்ளன. அதில், ஆண்கள் பிரிவில் கேரள காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஜிஎஸ்டி, பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கேஎஸ்இபி அணி, கேரளா காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.