ஒமைக்ரான் பரவலையும் கண்டுகொள்ளாமல் ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ராமநாதபுரம்: தொடர் விடுமுறையை முன்னிட்டு ஒமைக்ரான் பரவலையும் கண்டுகொள்ளாமல் ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கிறிஸ்துமஸ், வார விடுமுறை மற்றும் பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடற்கரையில் குளித்து ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் தை அமாவாசை நாட்களில் ஏற்படும் கூட்டம் போல் நேற்று இருந்தது. மேலும் புயலால் அழிந்த தனுஷ்கோடி, மேலும் நாட்டின் எல்லைப்பகுதியான அரிச்சல்முனை கடற்கரையை ரசிக்கவும், பாம்பன் பாலம் மற்றும் ரயில் பாலத்தை ரசிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.